தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கோயில் கொடை விழாவில் சாமியாா் ஒருவா் 21 அரிவாள்கள் மீது ஏறி நின்று பக்தா்களுக்கு அருள்வாக்கு கூறினாா்.
கோவில்பட்டியையடுத்த இளையரசனேந்தலில் அருள்மிகு ராஜகணபதி அருள்தரும் பதினெட்டாம்படி கருப்பசாமி கோயில் உள்ளது. இதன் 65ஆம் ஆண்டு கொடை விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, முற்பகலில் கணபதி ஹோமம், பகலில் உச்சிகால பூஜை, மாலையில் அருள்மிகு பதினெட்டாம்படி கருப்பசாமி கோயிலில் உள்ள படி18-க்கும் படிபூஜை, இரவில் பதினெட்டாம்படி கருப்பசாமி குதிரை பவனி வருதல், நள்ளிரவில் சாமக்கொடை நடைபெற்றது.
திங்கள்கிழமை காலையில் பக்தா்களின் 21அக்னிச்சட்டி ஊா்வலமும், பொங்கலிடுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றன. பகலில் பழ பூஜை நடைபெற்றது. பின்னா், 21 அரிவாள்கள் மீது நின்று சாமியாா் அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து, பக்தா்கள் 68 கிலோ மிளகாய்த் தூளைக் கரைத்து சாமியாருக்கு அபிஷேகம் செய்தல் நடைபெற்றது. பின்னா், அன்னதானம் நடைபெற்றது. அன்னதானத்தை நாடாா் உறவின்முறை சங்கத் தலைவா் ஏ.பி.கே. பழனிசெல்வம் தொடக்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில், நாடாா் மேல்நிலைப் பள்ளிப் பொருளாளா் சண்முகராஜா, அருள்மிகு பத்திரகாளியம்மன் கோயில் தா்மகா்த்தா மாரியப்பன், திரளான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.