பொதுத் தேர்வில் காப்பி அடித்தால்.. தண்டனை விவரங்கள் வெளியீடு
தமிழகத்தில் நடைபெறும் பொதுத் தேர்வுகளில் காப்பி அடித்தல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு என்னென்ன தண்டனைகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் நடைபெறும் பொதுத் தேர்வுகளில் காப்பி அடித்தல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு என்னென்ன தண்டனைகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தமிழகத்தில் நடைபெறும் 10, 11, 12ம் வகுப்புப் பொதுத் தேர்வில் மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டால் என்னென்ன தண்டனை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
அதன்படி, பொதுத்தேர்வில் காப்பி அடித்தல் போன்ற முறைகேட்டில் மாணவர்கள் ஈடுபட்டால் அடுத்த 2 முறை தேர்வு எழுத முடியாது.
Advertisement
வினாத்தாளை வெளியிடுதல் போன்றவற்றில் ஈடுபட்டால் மாணவர்கள் 3 ஆண்டுகளுக்கு தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
வினாத்தாளில் விடைகளைக் குறித்து அதனை அடுத்த மாணவர்களுக்கு கொடுத்தால், அவர் உடனடியாக தேர்வறையில் இருந்து வெளியேற்றப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.