வேலை நிறுத்தம் 
தமிழ்நாடு

மணப்பாறை தமிழ்நாடு காகித ஆலை முன்பு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம்

மணப்பாறை தமிழ்நாடு காகித ஆலை முன்பு பொது தொழிலாளர் துறை, தொ.மு.ச சங்க ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

எம்.ராஜசேகர்

மணப்பாறை : மணப்பாறை தமிழ்நாடு காகித ஆலை முன்பு பொது தொழிலாளர் துறை, தொ.மு.ச சங்க ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்தியா முழுவதும் இன்று அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெற்று வருகின்றது, இந்நிலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த மொண்டிப்பட்டியில் இயங்கி வரும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை – அலகு II-ன் தொழிலாளர்கள் பொது வேலை நிறுத்தம் செய்து 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தொழிலாளர் விரோதச் சட்டத்தை கைவிட வேண்டும், அத்தியாவசியப் பொருட்களை பொது விநியோகத் திட்டத்தில் வழங்கிட வேண்டும், ரூபாய் 3000 ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலை முன்பு பொது தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் தொமுச தொழில் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் மத்திய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT