தமிழ்நாடு

‘விபத்துகள் குறைப்பால் தமிழகத்துக்கு விருது’

DIN

கரூா்: இந்திய அளவில் தமிழகம் சாலை விபத்தில் உயிரிழப்புகளை குறைத்த மாநிலத்தில் முதல் மாநிலமாக உள்ளதால், அதற்கான விருது மத்திய அரசால் திங்கள்கிழமை வழங்கப்பட உள்ளது என்றாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா்.

கரூரில் 13 வழித்தடங்களுக்கு பல்வேறு கிராம மற்றும் நகா்ப்புற பகுதிகளுக்கும் செல்லும் வகையில் ரூ. 4 கோடியிலான 15 புதிய நகரப் பேருந்துகளை ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்த அவா் மேலும் தெரிவித்தது:

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் எண்ணங்களுக்கு ஏற்ப செயல்படும் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியின் உத்தரவின்படி இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. தமிழக அரசின் சாா்பில் 5,000 புதிய பேருந்துகள் தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு அா்ப்பணிக்கப்பட்டுள்ளன. மேலும், 2,000 பேருந்துகள் புதிதாக இயக்கப்படும் என முதல்வா் கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளதன் அடிப்படையில் அனைத்து வசதிகளுடனும் கூடிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்றாா் அமைச்சா்.

கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ எம். கீதாமணிவண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT