திமுக சார்பில் திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன் தலைமையில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் கட்சித் தொண்டர்கள் மகளிரணி அமைப்புகள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.
இதன்பின்னர் ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.