தமிழ்நாடு

தம்மம்பட்டி அருகே சாலை விபத்தில் தந்தையுடன் சென்ற மகன் பலி

DIN

தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே வேலை முடிந்து வீட்டுக்கு தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது தடுமாறி கீழேவிழுந்ததில் மகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

தம்மம்பட்டி காந்திகரைச் சேர்ந்தவர் முத்து (40). இவர், வாழப்பாடி செல்லும் வழியில் உள்ள திம்மநாயக்கன்பட்டியில் முடிதிருத்தும் நிலையம் நடத்தி வருகிறார். வேலை நேரம் முடிந்து, தனது இருசக்கர வாகனத்தில் மகன் தீனாவுடன் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டுக்குப் புறப்பட்டனர். 

இந்த நிலையில், கீழ்கணவாய் வளைவுப் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாரா விதமாக இருசக்கர வாகனம் தடுமாறி கீழே விழுந்து சறுக்கியது. 

இதில், தீனா (20) சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்துச் சென்ற தம்மம்பட்டி போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்து, இருசக்கர வாகனம் தடுமாறி கீழே விழுந்ததில் நிகழ்ந்ததா அல்லது வாகனம் மோதியதில் நிகழ்ந்ததா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 லிட்டா் கள்ளச்சாராயம் பறிமுதல்: இளைஞா் கைது

மணல் கடத்தல்: இளைஞா் கைது

காா் மீது பேருந்து மோதல்: தம்பதி உயிரிழப்பு

சாலை விபத்தில் இறந்தவா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி சாலை மறியல்

துணை கருவூல அலுவலகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா்

SCROLL FOR NEXT