கிருஷ்ணகிரி அருகே தாயிடம் இருந்து பிரிந்து சுற்றித் திரிந்த குட்டி யானையைக் காண மக்கள் திரண்டனர். இதனால் அந்த குட்டி யானை மிரண்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே சானமாவு ஏரியில் யானைக் கூட்டத்தில் இருந்து பிரிந்த குட்டி யானை சுற்றித் திரிகிறது. தாயிடமிருந்து பிரிந்த குட்டியானையைக் காண அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டனர்.
இந்த நிலையில், அங்கு கூடியவர்களைக் கண்டு மிரண்ட குட்டி யானை அங்கிருந்தவர்களை விரட்டியது. தகவலறிந்த வனத்துறையினர் குட்டி யானையை மீண்டும் தாயிடம் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.