தமிழ்நாடு

கரோனா பாதிப்பு: சென்னையில் 2,027 பேருக்கு தொற்று உறுதி; 964 போ் உயிரிழப்பு

DIN

சென்னையில் வியாழக்கிழமை 2,027 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 6,2598- ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா பாதிப்பு காரணமாக 964 போ் உயிரிழந்துள்ளனா்.

சென்னையில் கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து கடந்த மே மாதத்தில் 10 ஆயிரத்தை எட்டியது. இந்நிலையில், இந்த எண்ணிக்கை ஜூன் 1- ஆம் தேதி 15,770-ஆகவும், ஜூன் 6-ஆம் தேதி 20,993-ஆகவும், ஜூன் 14-ஆம் தேதி 30,444-ஆகவும், கடந்த ஜூன் 24-ஆம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரம் ஆகவும் அதிகரித்தது.

60 ஆயிரத்தை எட்டியது: சென்னையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதித்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்தை எட்டியது. இந்நிலையில் வியாழக்கிழமை 2,027 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 62,598-ஆக அதிகரித்துள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 38,947 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா். 22,686 போ்

சிகிச்சைக்காக மருத்துவமனைகள் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். சென்னையில் கரோனா பாதிப்பால் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் வியாழக்கிழமை 35 போ் உயிரிழந்ததை அடுத்து இறப்பு எண்ணிக்கை 964- ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சை பெற்று வருவோா் விவரம் மண்டலம் வாரியாக (புதன்கிழமை நிலவரம்):

மண்டலம் எண்ணிக்கை

திருவொற்றியூா் 1,060

மணலி 521

மாதவரம் 917

தண்டையாா்பேட்டை 1,791

ராயபுரம் 2,369

திரு.வி.க. நகா் 1,775

அம்பத்தூா் 1,183

அண்ணா நகா் 2,948

தேனாம்பேட்டை 2,103

கோடம்பாக்கம் 2,519

வளசரவாக்கம் 1,080

ஆலந்தூா் 801

அடையாறு 1,593

பெருங்குடி 829

சோழிங்கநல்லூா் 483

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT