தமிழ்நாடு

கரோனா பனிச் சுமையிலும், மனிதநேயப் பணியில் ஈடுப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் கௌரவிப்பு

DIN


சீர்காழி: சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் கழிவறையில் வயதான பெண்மணி கால் இடறி பீங்கானில் சிக்கி தவித்தார். இதனையறிந்த தூய்மைப் பணியாளர்கள் அவரை மீட்டனர்.

வைத்தீஸ்வரன் கோயில் தெற்கு வீதியில் வசிக்கும் வயதான பெண்மணி இருதினங்களுக்கு முன்னர் கழிவறையில் தவறி வழுக்கி விழுந்த போது ஒரு கால் மட்டும் பீங்கானுக்குள் மாட்டிக்கொண்டு எடுக்க முடியாமல் தவித்தார். சத்தம் கேட்டு ஓடிச்சென்ற குடும்ப உறுப்பினர்களும் எவ்வளவோ போராடியும் காலை விடுவிக்க முடியவில்லை. இதனால் அந்த பெண்மணி வலியாலும், பயத்தாலும் ஜூரம் வந்து மயங்கினார்.

அப்போது அத்தெருவில் பணியாற்றிக்கொண்டிருந்த தூய்மைப்பணியாளர்கள், பீங்கானை உடைத்து பெண்மணியின் காலை விடுவித்து மீட்டனர். 


இந்த அவசர உதவி செய்து பெண்மணியை மீட்ட தூய்மைப்பணியாளர்கள் ந. கண்ணையன், ந. செல்வம் , சீ. தினேஷ் ஆகியோருக்கு பேரூராட்சி செயல் அலுவலர் கு. குகன் சனிக்கிழமை பரிசு அளித்து பாராட்டினார். சுதந்திர தினவிழாவில் பதக்கம் அளித்து கௌரவிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

SCROLL FOR NEXT