தமிழகம் முழுவதும் நாளை பெட்ரோல் பங்க்குகள் இயங்காது என தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
நாளை முழு முடக்கம் கடைப்பிடிக்கவுள்ளதையொட்டி, தமிழகம் முழுவதும் இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை நள்ளிரவு 12 மணி வரை விற்பனை இல்லை என அறிவித்துள்ளது.
ஆம்புலன்ஸ், பால், அவசர மருத்துவச் சிகிச்சை வாகனங்களுக்கு மட்டும் நாளை பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திங்கள்கிழமை முதல் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.