தமிழ்நாடு

தூத்துக்குடியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்தார்

DIN

தூத்துக்குடி பிரையண்ட் நகரைச் சேர்ந்த சங்கரநாராயணன் என்பவரது மனைவி மீனா (53) இவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அவருக்கு காய்ச்சல் முன் சிகிச்சைப் பிரிவில் கரோனா தொற்றுக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.  இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடல், உறவினர் ஒப்புதலுடன் மாநகராட்சி மூலமாக இன்று பிற்பகல் 2 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனால் தூத்துக்குடியில் கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி 321 பேர் கரோனா நோயினால் பாதிக்கப்பட்டு உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT