'முகக்கவச வடிவில் பரோட்டா' - விழிப்புணர்வு ஏற்படுத்தி மதுரை உணவகம் அசத்தல்!
மதுரையில் உள்ள ஒரு உணவகத்தில் முகக்கவசம் வடிவில் பரோட்டாக்கள் வழங்கப்படுவது வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மதுரையில் உள்ள ஒரு உணவகத்தில் முகக்கவசம் வடிவில் பரோட்டாக்கள் வழங்கப்படுவது வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
உணவகத்தின் மேலாளர் பூவலிங்கம் இதுகுறித்து, 'மதுரையில் கரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது. எனவே, கரோனாவை கட்டுப்படுத்த மக்களிடையே முகக்கவசம் அணிய விழிப்புணர்வைப் பரப்புவதற்காக முகக்கவச வடிவில் பரோட்டாக்களை அறிமுகப்படுத்தினோம்' என்றார்.