முகப்பு
தமிழ்நாடு

ஸ்ரீபெரும்புதூரில் 3000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் விநியோகம்

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 3000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:56 PM
பகிர்:

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட கச்சிப்பட்டு, வெங்கடராமன்பிள்ளை சத்திரம் மற்றும் பட்டுநூல் சத்திரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 3000 குடும்பங்களுக்கு ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ கே.பழனி ஏற்பாட்டின் பேரில் 5 கிலோ அரிசி செவ்வாய்க்கிமை வழங்கப்பட்டது.

கரோனா வைரஸ் தொற்று பரவாமஸ் இருக்க போடப்பட்டுள்ள பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட கச்சிப்பட்டு, பட்டுநூல்சத்திரம் மற்றும் வெங்கடராமன் பிள்ளைசத்திரம் பகுதியை சேர்ந்த சுமார் 3000 ஆயிரம் குடும்பங்களுக்கு ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பழனி ஏற்பாட்டின் பேரில் தலா 5 கிலோ அரிசி வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் எறையூர் முனுசாமி தலைமையிலும், ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் குமார் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அதிமுக மாவட்டதுனை செயலாளர் போந்தூர்செந்தில்ராஜன் கலந்துக்கொண்டு நிவாரணமாக அனைத்து வீடுகளுக்கும் தலா 5 கிலோ அரிசியை வழங்கினார். இதில் அதிமுக மற்றும் அதனைதோழமை கட்சி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →