மின் கட்டண நிர்ணய நடைமுறைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம்
மின் கட்டண நிர்ணய நடைமுறைக்கு எதிரான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது
சென்னை: மின் கட்டண நிர்ணய நடைமுறைக்கு எதிரான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
நான்கு மாதங்களுக்கு சேர்த்து மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகக் கூறி, மின் கட்டண நிர்ணய நடைமுறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டது.
மின்சார ஒழுங்குமுறை சட்ட விதிகளை பின்பற்றியே கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக அரசு தரப்பு அளித்த விளக்கத்தை ஏற்று வழக்கை தள்ளுபடி செய்வதாக சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.