தமிழ்நாடு

பொன்னம்பாளையம், கரியானூர் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருள்கள் வழங்கல் 

DIN

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட பொன்னம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கரியானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அரசு வழங்கிய உலர் உணவுப் பொருள்கள் வழங்கும் விழா பொன்னம்பாளையம் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றன. 

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட கோனேரிப்பட்டி அக்ரஹாரம்  ஊராட்சி மன்றத்தலைவர் ஆனந்தன் இவ்விழாவிற்கு தலைமை வகித்து பொன்னம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கரியானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளிட்ட இரு பள்ளிகளில் படிக்கும் 150 மாணவ, மாணவிகளுக்கு அரசு வழங்கிய அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவுப்பொருள்களை வழங்கினார். 

சங்ககிரி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கந்தசாமி, தலைமையாசிரியர்கள் பொன்னம்பாளையம் தனராஜ், செந்தில்குமார், அதிமுக நிர்வாகி ரமேஷ்  உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட கோனேரிப்பட்டி பொன்னம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு வழங்கிய உலர் உணவுப் பொருள்களை வியாழக்கிழமை வழங்குகிறார் கோனேரிப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் ஆனந்தன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவா் உயிரிழப்பு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

விராலிமலை அருகே புளியமரத்தில் திடீா் தீ

நம்பம்பட்டி கோயில் திருவிழா: தீச்சட்டி ஏந்தி நோ்த்திக் கடன்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT