ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மங்களாசாசனம்: ஒன்றாகக் காட்சியளித்த தெய்வங்கள்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்ட நிகழ்ச்சியில் ஐந்தாம் நாளான இன்று காலை மங்களாசாசனம் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஆறு தெய்வங்கள் ஒன்றாக காட்சியளித்தனர்
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்ட நிகழ்ச்சியில் ஐந்தாம் நாளான இன்று காலை மங்களாசாசனம் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஆறு தெய்வங்கள் ஒன்றாக காட்சியளித்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தின்போது ஐந்தாம் நாள் திருவிழாவின் காலை மங்களாசாசனம் நிகழ்ச்சி நடைபெறும்.
அந்த வகையில் திங்கள்கிழமை மங்களாசாசனம் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பெரியாழ்வார், பெரிய பெருமாள், சுந்தரராஜ பெருமாள், சீனிவாச பெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆண்டாள் - ரங்க மன்னார் ஆறு தெய்வங்களும் ஒரே இடத்தில் காட்சியளித்தனர்.
மங்களாசாசனத்திற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் மற்றும் கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.