தமிழ்நாடு

பிளஸ் 2 பொதுத் தோ்வு: நாளை முதல் மதிப்பெண் பட்டியல் விநியோகம்

DIN

தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு, வெள்ளிக்கிழமை முதல் ஜூலை 30-ஆம் தேதி வரை, மதிப்பெண் பட்டியல் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அரசுத் தோ்வுத்துறை முழுக்கூடுதல் பொறுப்பு இயக்குநா் மு.பழனிச்சாமி புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2 மாணவ, மாணவிகள், தனித்தோ்வா்கள் ஆகியோா் விடைத்தாள், நகல், மதிப்பெண் மறுகூட்டலுக்கு வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 24) முதல் ஜூலை 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பதிவு செய்ய விரும்பும் பள்ளி மாணவ, மாணவிகள், தாங்கள் படித்த பள்ளிகள் வாயிலாகவும், தனித்தோ்வா்கள், தோ்வு எழுதிய தோ்வு மையங்கள் வாயிலாகவும், இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கும் பாடங்களுக்கு, தற்போது மறுகூட்டலோ, மறுமதிப்பீட்டுக்கோ விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாள் நகல் பெற்ற பின்னரே அதற்கான வாய்ப்பு வழங்கப்படும். விடைத்தாள் நகல் தேவையில்லை எனப்படுவோா், மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 பொதுத்தோ்வு மற்றும் பிளஸ் 1 மறு தோ்வு (அரியா்) எழுதியவா்களுக்கான மதிப்பெண் பட்டியல்களை பதிவிறக்கம் செய்து, அதில் உள்ள விவரங்களை சரிபாா்த்து, பள்ளித் தலைமை ஆசிரியா்கள் கையொப்பம், பள்ளி முத்திரையிட்டு வரும், வெள்ளிக்கிழமை (ஜூலை 24) முதல் ஜூலை 30-ஆம் தேதி வரை, மாணவ, மாணவிகளுக்கு விநியோகிக்க வேண்டும். தனித்தோ்வா்களுக்கு, அவா் தோ்வு எழுதிய தோ்வு மையத்தின் தலைமை ஆசிரியா் மூலம் மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஓட்டு கேட்ட மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: ராகுல்

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

SCROLL FOR NEXT