தமிழ்நாடு

தமிழகத்தில் 8 நிறுவனங்களின் தொழிற்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி

DIN

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கடந்த 27ம் தேதி தலைமைச் செயலகத்தில், தொழில் துறை சார்பில், 2,368 கோடி ரூபாய் முதலீட்டில் 24,870 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், புதிதாக நிறுவப்படவுள்ள 8 நிறுவனங்களின் தொழிற் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்கள்.

மேலும், 3,185 கோடி ரூபாய் முதலீட்டில் 6,955 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள 11 தொழில் நிறுவனங்களின் வணிக உற்பத்தியையும் துவக்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், தொழில் துறையில் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக தொடர்ந்து திகழச் செய்யவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக, தொழில் முனைவோர்கள் மற்றும் பெரும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் தமிழ்நாடு எப்போதும் முன்னிலை வகித்து வருகிறது.

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, உலக பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டு, படிப்படியாக மீண்டெழுந்து வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை தொடர்ந்து மேம்படுத்திடும் வகையில், இன்றையதினம் 8 தொழில் திட்டங்களில், 5 திட்டங்களுக்கு நேரடியாகவும், 3 திட்டங்களுக்கு காணொலிக் காட்சி மூலமாகவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டது.

அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களின் விவரம்:
1) செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரத்தில், 1,500 கோடி ரூபாய் முதலீட்டில், 23,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், CapitaLand நிறுவனத்தால் கட்டப்படும் International Tech Park Chennai, Radial Roadதகவல் தொழில் நுட்ப பூங்கா திட்டம்.

2) கடலூர் மாவட்டம், சிப்காட் தொழிற்பூங்காவில், 350 கோடி ரூபாய் முதலீட்டில், 300 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், TATA Chemicals நிறுவனத்தின் சிலிக்கா உற்பத்தி திட்டம்.

3) திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள மஹிந்திரா ஆரிஜின்ஸ் தொழிற் பூங்காவில், 105 கோடி ரூபாய் முதலீட்டில், 160 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த Nissei Electric  நிறுவனத்தின் மின்சார மற்றும் மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம். (இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 26.9.2019 அன்று முதல்வர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது).

4) திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள மஹிந்திரா ஆரிஜின்ஸ் தொழிற் பூங்காவில், 100 கோடி ரூபாய் முதலீட்டில், 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜப்பான் நாட்டினைச் சேர்ந்த Usui Susira  நிறுவனத்தின் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம்.

5) செங்கல்பட்டு மாவட்டம், Mahindra World City தொழிற் பூங்காவில், 100 கோடி ரூபாய் முதலீட்டில், 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Dinex நிறுவனத்தின் Diesel Engine-களுக்கான Exhaust உற்பத்தி திட்டம். (இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 25.5.2020 அன்று முதல்வர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது).

6) காஞ்சிபுரம் மாவட்டத்தில், 150 கோடி ரூபாய் முதலீட்டில், 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Steel Shoppe நிறுவனத்தின் வாகன தொழிற்சாலைகளுக்கான எஃகு பாகங்கள் உற்பத்தி திட்டம்.

7) கடலூர் மாவட்டம், சிப்காட் தொழிற்பூங்காவில், 47 கோடி ரூபாய் முதலீட்டில், 550 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், MRC Mills     நிறுவனத்தின் Textiles processing திட்டம்.

8) விழுப்புரம் மாவட்டம், கம்பூர் கிராமத்தில், 16 கோடி ரூபாய் முதலீட்டில், 160 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Sri Raajarajeshwari Life Care நிறுவனத்தின் மருந்து மற்றும் மருத்துவப் பொருட்கள் உற்பத்தி திட்டம். இந்த நிறுவனம் கோவிட்-19 நிவாரண மருந்துப் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபடவுள்ளது.

என மொத்தம் 8 திட்டங்களின் மூலம், தமிழ்நாட்டிற்கு 2,368 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, சுமார் 24,870 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். மேலும், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வானூர்தி தொழிற்பூங்காவில், டிட்கோ மற்றும் டைடல் நிறுவனங்களின் கூட்டு முயற்சியால், 250 கோடி ரூபாய் முதலீட்டில் அமையவுள்ள வானூர்தி உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உயர் கணினி மற்றும் பொறியியல் வடிவமைப்புக்கான AERO HUB உயர்நுட்ப தொழில் மையத்திற்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

முதல்வர், 3,185 கோடி ரூபாய் முதலீட்டில், 6,955 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள 11 தொழில் நிறுவனங்களின் வணிக உற்பத்தியை துவக்கி வைத்தார்கள். இந்த 11 திட்டங்களில், 8 திட்டங்கள் நேரடியாகவும், 3 திட்டங்கள் காணொலிக் காட்சி மூலமாகவும் துவக்கி வைக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் கிளிக்ஸ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

SCROLL FOR NEXT