சென்னை: இயற்கை வளங்களை விலையாகக் கொடுத்துவிட்டு வளர்ச்சியை பெறக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
தருமபுரி சின்னமானசாவடியில் ஓடையை மீட்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளனர்.
நீலத்தடி நீர் அதிகளவில் சுரண்டப்படுகிறது. மழைநீர் அதிகளவில் கடலில் கலக்கிறது. நீர்நிலை ஆக்ரமிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நீர்வளத்தைக் காக்க ஏன் தனித்துறை அமைக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது குறித்து 4 வாரத்தில் உள்துறை செயலாளர் பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.