தமிழ்நாடு

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் காட்டெருமை தாக்கி கர்ப்பிணிப் பெண் சாவு

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் காட்டெருமை தாக்கியதில் கர்ப்பிணிப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

DIN


கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் காட்டெருமை தாக்கியதில் கர்ப்பிணிப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான மூலையூர் பகுதியைச் சேர்ந்த விவசாய கூலி முருகன். 8 மாத கர்ப்பிணிப் பெண்ணான இவரது மனைவி செல்வி(28), கடந்த 21 ஆம் தேதி அதேப் பகுதியிலுள்ள தோட்டத்தில் பீன்ஸ் காய் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அப் பகுதியில் மறைந்திருந்த காட்டெருமை அவரை தாக்கியுள்ளது. பலத்த காயமடைந்த அவர் தேனி கானாவிலக்கு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

கொடைக்கானல் பகுதிகளில் தற்போது காட்டெருமைகள் அதிக அளவில் உலா வருகின்றது. இவற்றை வனப் பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத்துறையினர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பொது மக்கள் பெரும் அச்சத்துடன் வசித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 9,520 உயர்வு!

இனி ஏடிஎம்களில் ரூ. 10, 20, 50 நோட்டுகள்!

யுஜிசியின் புதிய விதிமுறைகள் சாதியப் பாகுபாட்டை ஒழிக்கும்! முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

கொலம்பியாவில் விமான விபத்து! எம்.பி. உள்பட 15 பேர் பலி!

பாராமதியில் அஜீத் பவாருக்கு இன்று இறுதிச் சடங்கு! ஏற்பாடுகள் தீவிரம்!

SCROLL FOR NEXT