முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் பரிசோதிக்கப்படுவோரில் 6-இல் ஒருவருக்கு கரோனா

​சென்னையில் பரிசோதனை மேற்கொள்ளப்படும் 5-இல் அல்லது 6-இல் ஒருவருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:45 PM
பகிர்:


சென்னையில் பரிசோதனை மேற்கொள்ளப்படுவோரில்  5-இல் அல்லது 6-இல் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் பற்றிய புதிய தகவல்களைத் தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மேலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டவாரியாக மேற்கொள்ளப்பட்டுள்ள பரிசோதனை பற்றிய விவரங்களையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதன்படி, சென்னையில் மொத்தம் 1,21,950 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இன்றைய நிலவரப்படி சென்னையில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 22,149 ஆக உள்ளது.

இந்தக் கணக்கின்படி சென்னையில் செய்யப்படும் பரிசோதனைகளில் 5-இல் அல்லது 6-இல் ஒருவருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவது தெரிய வருகிறது.

இந்த நிலை, சென்னையில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. எனவே, சென்னையில் பரிசோதிக்கப்படும் எண்ணிக்கையை அதிகரித்தால் இன்னமும் நிலைமை தெளிவாகும் என்று கருதப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →