தமிழ்நாடு

ரேஷன் கடைகளில் முகக் கவசம்: தமிழக அரசு முடிவு

​ரேஷன் அட்டைதாரர்களுக்காக முகக் கவசங்களை வாங்க தமிழக அரசு வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் குழு அமைத்துள்ளது.

DIN


ரேஷன் அட்டைதாரர்களுக்காக முகக் கவசங்களை வாங்க தமிழக அரசு வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் குழு அமைத்துள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அனைவரும் முகக் கவசங்கள் அணிய வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதேசமயம், ஏழை மக்கள் முகக் கவசம் வாங்குவதிலுள்ள பொருளாதார சிக்கல் பற்றியும் கேள்விகள் எழுந்தன. 

இதைத் தொடர்ந்து, பொது மக்களுக்கு ரேஷன் கடைகளில் இலவசமாக முகக் கவசங்கள் வழங்குவது பற்றி அரசு பரிசீலித்து வருவதாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஜூன் 2-ஆம் தேதி தெரிவித்தார்.

இந்த நிலையில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு 13.48 கோடி முகக் கவசங்களை விலை நிர்ணயம் செய்து வாங்குவதற்கு தமிழக அரசு வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் குழு அமைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணி நேரம்... சென்னை, திருவள்ளூர் உள்பட 5 மாவட்டங்களில் மழை!

பிரியமான லெஹெங்கா... ஆம்னா ஷரீஃப்!

பிகார் தேர்தல்: காட்டாட்சிக்கு எதிராக பெண்கள் - பிரதமர் மோடி

வெண் மேகமே... கரிஷ்மா டன்னா!

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!

SCROLL FOR NEXT