தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 1,875 பேருக்கு கரோனா: சென்னையில் மட்டும் 1,407

​தமிழகத்தில் புதிதாக 1,875 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN


தமிழகத்தில் புதிதாக 1,875 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் புதிதாக 1,875 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,407 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 38,716 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மேலும் 23 பேர் கரோனா தொற்றால் பலியாகியுள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் பலியானோர் 2, அரசு மருத்துவமனையில் பலியானோர் 21. இதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 349 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம், இன்று ஒரேநாளில் 1,372 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 20,705 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்றைய தேதியில் தனிமையில் உள்ளவர்கள் உள்பட 17,659 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று மட்டும் 17,675 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், இன்று 16,829 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 6,55,675 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிலக்கடலை பயிரை சேதப்படுத்திய காட்டுப் பன்றிகள்

கும்பக்கரை அருவிக்கு செல்ல தடை நீடிப்பு

காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட வழக்குரைஞா் கைது

திமுக ஆட்சியில் மா விவசாயிகளுக்கு எந்தத் திட்டமும் தொடங்கவில்லை: எல்.முருகன்

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்க முறைகேடு வழக்கு: கேரள சிறப்பு புலனாய்வுக் குழு சென்னையில் விசாரணை

SCROLL FOR NEXT