சென்னை: சென்னையில் ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் ஏதும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
சென்னையில் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதே போல, சென்னைக்கு இ-பாஸ் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலும் உண்மையில்லை என்றும் தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
சென்னையில் ஊரடங்கை முழு அளவில் செயல்படுத்தக் கோரிய வழக்கு விசாரணை திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.