FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திருப்பதிக்கு வந்து நிராசையுடன் திரும்பிச் சென்ற பக்தர்கள்

திருமலை ஏழுமலையானைத் தரிசிக்க வந்த பக்தர்கள் சிலர் தரிசனம் கிடைக்காமல் நிராசையுடன் செல்லும் நிலை ஏற்பட்டது.

27 ஜனவரி 2024, 10:17 pm IST
பகிர்:

திருமலை ஏழுமலையானைத் தரிசிக்க வந்த பக்தர்கள் சிலர் தரிசனம் கிடைக்காமல் நிராசையுடன் செல்லும் நிலை ஏற்பட்டது.

திருமலை ஏழுமலையான் தரிசனத்தில் வியாழக்கிழமை முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 3 ஆயிரம் தரிசன டிக்கெட் ஆன்லைன் மூலமும், 3 ஆயிரம் தரிசனம் டிக்கெட் நேரடி முன்பதிவு டோக்கன்கள் மூலமும் வழங்கப்பட்டு வருகிறது. அதில் ஆன்லைன் டிக்கெட்டுகள் வரும் ஜூன் 30ம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்ட நிலையில் நேரடி தரிசன டோக்கன்கள் வரும் ஜூன் 17ம் தேதி வரை வழங்கப்பட்டு விட்டது. 

இதை  அறியாத பக்தர்கள் சிலர் திருப்பதிக்கு வந்து தரிசன டோக்கன் பெற சீனிவாசம், விஷ்ணுநிவாசம், அலிபிரி உள்ளிட்ட இடங்களில் காத்திருக்க தொடங்கினர். அங்கு வந்த ஊழியர்கள் தரிசன டோக்கன்கள் 17ம் தேதி வரைக்கும் வழங்கப்பட்டு விட்டதைத் தெரிவித்தனர். அத்தனை நாட்கள் திருப்பதியில் தங்க முடியாத பக்தர்கள் அங்கிருந்து அப்படியே நிராசையுடன் திரும்பி செல்கின்றனர்.

Advertisement

Advertisement

மேலும் சிலர் தரிசன டிக்கெட் மற்றும் டோக்கன்கள் குறித்து அறியாமல் அலிபிரியிலிருந்து பேருந்தில் திருமலைக்குச் சென்று அங்கு உண்மை நிலையை அறிந்து திரும்பி வர நேர்ந்தது. அதனால் தேவஸ்தானம் இனி தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே பக்தர்களைப் பேருந்து பயணச் சீட்டு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. அலிபிரி சோதனை சாவடியிலும் தரிசன டிக்கெட் இருப்பவர்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, பக்தர்கள் தரிசனம் குறித்து நன்கு தெரிந்து கொண்டு வர வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments