FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கொல்லிமலையில் வேப்ப எண்ணெய் கொண்டு வெட்டுக்கிளிகளை அழிக்கும் பணி தொடக்கம்

கொல்லிமலையில் மிளகுக் கொடிகளைச் சேதப்படுத்திய வெட்டுக்கிளிகளை அழிக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

Updated On : 13 ஜூன் 2020, 3:00 pm IST
கொல்லிமலை வளப்பூர் நாடு பகுதியில் மிளகு தோட்டத்தில்  வெட்டுக்கிளிகளை அழிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.
பகிர்:

கொல்லிமலையில் மிளகுக் கொடிகளைச் சேதப்படுத்திய வெட்டுக்கிளிகளை அழிக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் சில்வர் ஓக் மரங்கள் நடப்பட்டு மிளகு கொடிகள் படர விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெட்டுக்கிளிகள் கூட்டம் மிளகு கொடிகளைச் சேதப்படுத்தி வருகின்றன. கொல்லிமலை வளப்பூர் நாடு இளமாத்திப்பட்டி கிராமப் பகுதிகளில் மிளகு கொடிகளில் நூற்றுக்கணக்கான வெட்டுக்கிளிகள் இலைகளையும், காய்களையும் நாசப்படுத்தி உள்ளதால் அங்குள்ள விவசாயிகள் கவலையடைந்தனர். 

தற்போது  மிளகு அறுவடைக் காலமாகும். சீதோஷ்ண நிலை மாற்றத்தால் வெட்டுக்கிளிகள் மிளகு கொடிகளை முழுவதும் தின்று வருகிறது. மிளகு கொடி வளர 10 ஆண்டுகள் வரையாகும். இங்குள்ள  பழங்குடியின விவசாய மக்கள் மிளகு விளைச்சலை நம்பித்தான் வாழ்வை நடத்துகின்றனர். வெட்டுக்கிளிகள் அட்டகாசம் அதிகரிக்கவே அவற்றை அழிக்கும் பணி தொடங்கியுள்ளது.   

Advertisement

Advertisement

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் மணிகண்டன் கூறியது: 
கொல்லிமலையில் இரண்டு விவசாயிகளின் மிளகு தோட்டத்தில் வெட்டுக்கிளிகள் உள்ளன. இவற்றை அழிக்க வேப்ப எண்ணெய் மற்றும் தண்ணீர் கலந்து மிளகு கொடிகளில் அடிக்கும் பணி தொடங்கி உள்ளது. இந்த வெட்டுக்கிளிகள் சாதாரண வகையானது தான். பாலைவன வெட்டுக்கிளிகள் என நினைத்து விவசாயிகள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments