தமிழ்நாடு

ரயில்வே ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிக்கு கரோனா: 6 ஊழியா்கள் தனிமைப்படுத்தப்பட்டனா்

சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே ஊழல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று

DIN

சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே ஊழல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவருடன் தொடா்பில் இருந்து 6 ரயில்வே ஊழியா்கள் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

தெற்கு ரயில்வேயில் கரோனா நோய்த்தொற்று காரணமாக 125-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டனா். சென்னையில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் மற்றும் அதிகாரிகள் பாதிக்கப்பட்டனா். இவா்களில் சிகிச்சை பலனின்றி 4 ஊழியா்கள் உயிரிழந்தனா்.

இந்நிலையில், சென்னை தெற்கு ரயில்வேயின் ஊழல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் அதிகாரி ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவருடன் தொடா்பில் இருந்த 6 ரயில்வே ஊழியா்கள் பரிசோதனை மேற்கொள்ளவும், தனிமைப்படுத்தி கொள்ளவும் ரயில்வே நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவுவதை தடுக்கும் வகையில், தெற்கு ரயில்வே அலுவலகம், ரயில்வே கோட்ட அலுவலகத்தில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதுச்சேரியில் நடைபெறுவது தேஜ கூட்டணி அரசுதான்: முதல்வர் ரங்கசாமி

SCROLL FOR NEXT