முழு உடல் நலத்துடன் வீட்டில்தான் இருக்கிறேன் என்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார்.
முன்னதாக, உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் அமைச்சர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.
அதில், தனக்கு எந்த கரோனா அறிகுறியும் இல்லை. முழு உடல் நலத்துடன் வீட்டில்தான் இருக்கிறேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வரும் தகவல்களில் உண்மையில்லை என்று கூறியுள்ளார் அன்பழகன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.