தமிழ்நாடு

விதவைப் பெண்கள் தினம்: தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி அரசுக்கு மனு அளிப்பு

DIN

தமிழகத்தில் முழு மது விலக்கினை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி விதவைப் பெண்கள் வாழ்வாதாரச் சங்கத்தின் சார்பில் பெண்கள் அரசுக்கு செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

உலக விதவைப் பெண்கள் தினம் ஜூன் 23ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டாட்சியர் மூலம் விதவைப் பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் சார்பில் அரசுக்கு அளிக்கப்பட்ட  மனுவின் கோரிக்கை விபரம்:

விதவைப் பெண்கள் மீதான பாகுபாடுகளைப் போக்கத் தனியாக வன்கொடுமை தடுப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும். ஆதரவற்ற விதவைகளுக்கான மாத .உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தவும், நிபந்தனைகள் இல்லாமல் உதவி வழங்க வேண்டும். விளிம்பு நிலை வாழ் விதவைகள், கணவனால் கைவிடப்பட்டு வாழும் பெண்களுக்கு இலவச வீட்டுமனை, வீடு கட்டிக் கொடுக்கு திட்டத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவாக அளிக்கப்பட்டது.

கரோனா தொற்று காரணமாக உலக விதவைப் பெண்கள் தின நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் ரத்து செய்யப்பட்டு கோரிக்கைகள் மனுவாக அளிக்கப்பட்டது. இதில், அமைப்பின் நாகை மாவட்டத் தலைவர் கே.புஷ்பா தலைமை வகித்தார். மண்டலத் தலைவர்கள் வி.பிளோனா, வி.மகரஜோதி, கே.சாந்தி, கே.சத்யா, ஆர்.ஜெயலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT