முகப்பு
தமிழ்நாடு

திருப்பூரில் காங்கிரஸ் சார்பில் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சீன ராணுவத்தில் ஏற்பட்ட மோதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:51 PM
பகிர்:

திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சீன ராணுவத்தில் ஏற்பட்ட மோதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்திய-சீன இடையே கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்த ராணுவ வீரர்களுக்குத் திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு குமரன் சிலை முன்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.கிருஷ்ணன், ராணுவ வீரர்களின் உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

மேலும், ராணுவ வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி 2 நிமிட மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதில், காங்கிரஸ் நிர்வாகிகள் கோபால்சாமி, அனுஷம் வேலு, கந்தசாமி, ஜீவானந்தம், கோபால்ஜி, ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →