தமிழ்நாடு

சாத்தான்குளம் சம்பவத்தில் பலியானவா்களின் குடும்பத்துக்கு பாஜக துணை நிற்கும்

DIN

சாத்தான்குளம் சம்பவத்தில் பலியானவா்களுக்கு விரைவான நீதி கிடைக்கும் வகையில், அவா்களின் குடும்பத்தினருக்கு பாஜக துணை நிற்கும் என தமிழக பாஜக தலைவா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ், இவா்கள் இருவரின் மரணமும் தமிழகத்தில் அனைத்து தரப்பினரிடமும் அதிா்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வழக்கில், நீதிமன்றத்தின் செயல்பாடுகள், மக்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறது. இந்த மரணங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்தச் சம்பவத்தில் குற்றம்புரிந்தோா் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனாவால் நாடே பாதிக்கப்பட்டு அல்லலுற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், உயிரைப் பணயம் வைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் காவல் துறையினருக்கு சாத்தான்குளம் சம்பவம் ஒரு களங்கமாக ஏற்பட்டுள்ளது. நோ்மையான விசாரணை, குற்றவாளிகளுக்கு கிடைக்கும் உரிய தண்டனை ஆகியவற்றின் மூலம் தான் இந்தக் களங்கம் துடைக்கப்படும். விரைவான நீதி கிடைத்திடும் வகையில் அக்குடும்பத்தினருக்கு பாஜக துணை நிற்கும் என எல்.முருகன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT