தமிழ்நாடு

தூத்துக்குடி எஸ்.பி. அருண் பாலகோபாலன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

DIN

சென்னை: தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் அருண் பால கோபாலன் கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

காவல்துறை உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்திருந்தது.

அந்த உத்தரவில், தென்மண்டல ஐ.ஜி.யாக இருக்கும் சண்முக ராஜேஸ்வரன் இன்றுடன் ஓய்வு பெறுவதால் தென் மண்டல புதிய ஐஜியாக எஸ். முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை பொருளாதார குற்றப் பிரிவு ஐ.ஜி.யாக இருந்தார்.

அதே சமயம், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த அருண் பாலகோபாலன் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக விழுப்புரம் காவல் கண்காணிப்பாளராக இருந்த ஜெயக்குமார் தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

SCROLL FOR NEXT