திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மாசித்திருவிழாவின் ஐந்தாம் நாளில் சுவாமி மற்றும் அம்மன் தங்கமயில் வாகனத்தில் வீதி உலா வந்தனர்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித்திருவிழாவின் 5- ம் நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதில் சிவன் கோயிலில் குட வருவாயில் தீபாராதனை நடை பெற்று, சுவாமி குமரவிடங்கப்பெருமான், தெய்வானை அம்மன் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.
பக்தர்கள் இதனைக் கண்டு வழிபட்டனர்.