க.அன்பழகனின் மறைவுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல்
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் மறைவுக்கு முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் மறைவுக்கு முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
வயது முதிா்வின் காரணமாக சிகிச்சை பெற்று வந்த க.அன்பழகன் அப்பல்லோ மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஒரு மணியளவில்
காலமானாா்.
இதுகுறித்து பொன்.ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள இரங்கல் செய்தியல், திமுக பொதுச் செயலாளரும், திராவிட இயக்க மூத்த தலைவர்களில் ஒருவருமான க. அன்பழகன் இன்று அதிகாலை காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
Advertisement
அவரது குடும்பத்தினருக்கும், கட்சித் தொண்டர்கள், தலைவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன், அவரது பிரிவைத் தாங்கும் மனவலிமையை தந்திடவும் எல்லாம்வல்ல அன்னை பராசக்தியை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.