ஓமனில் இருந்து நாடு திரும்பிய தமிழகத்தைச் சேர்ந்தவருக்கு கரோனா பாதிப்பு
ஓமனில் இருந்து நாடு திரும்பிய தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட மேலும் மூவருக்கு கரோனா இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடுஓமனில் இருந்து நாடு திரும்பிய தமிழகத்தைச் சேர்ந்தவருக்கு கரோனா பாதிப்பு
ஓமனில் இருந்து நாடு திரும்பிய தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட மேலும் மூவருக்கு கரோனா இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஓமனில் இருந்து நாடு திரும்பிய தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட மேலும் மூவருக்கு கரோனா இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவை அச்சுறுத்தி வந்த கரோனா வைரஸ் நோய்த் தொற்று, தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனாவைத் தவிர்த்து தென் கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளும் தற்போது கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஈரானில் இருந்து லடாக் வந்த 2 பேருக்கும், ஓமனில் இருந்து நாடு திரும்பிய தமிழருக்கும் கரோனா கரோனா இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை சிறப்பு செயலாளர் சஞ்சீவ குமார் தெரிவித்துள்ளார்.
எனினும், 3 பேரின் உடல்நிலையும் சீராக உள்ளதாக அவர் கூறியுள்ளார். இத்துடன் சோ்த்து, நாட்டில் இதுவரை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளான நபர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு அளிக்கப்படுகிறது.
காய்ச்சல் இருந்து அவருக்கு மாதிரிகளை சோதனை செய்ததில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.