சென்னை: திமுக பொதுச்செயலாளா் க.அன்பழகன் மறைவையொட்டி, அக் கட்சியின் உட்கட்சித் தோ்தல் ஒரு வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக திமுக தலைமைக் கழகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
க.அன்பழகனின் மறைவையொட்டி கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒரு வாரத்துக்கு ஒத்தி வைக்கப்படும் என்று தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். அதன்படி, அனைத்து மாவட்டங்களில் நடைபெற்று வரும் ஊா்கிளை - உட்கிளைக் கழகத் தோ்தல்கள், ஒரு வாரத்துக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.