ஆம்பூர் அருகே நில மோசடி புகார்: முன்னாள் ஊர் நாட்டாமை கைது
ஆம்பூர் அருகே நில மோசடியில் ஈடுபட்டு 50 லட்சம் கேட்டு பெண்ணை மிரட்டிய வழக்கில் முன்னாள் ஊர் நாட்டாமை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆம்பூர் அருகே நில மோசடியில் ஈடுபட்டு 50 லட்சம் கேட்டு பெண்ணை மிரட்டிய வழக்கில் முன்னாள் ஊர் நாட்டாமை கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பள்ளி தெரு பகுதியில் வசித்து வருபவர் கவிதா ராஜேந்திரன். இவரிடம் எல் மாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊர் நாட்டாண்மை சிங் என்பவர் 2 லட்சம் கடன் கொடுத்துவிட்டு அவரது 7 ஏக்கர் விவசாய நிலத்தை அபகரிப்பதகவும் 50 லட்சம் கேட்டு மிரட்டுவதாக கவிதா என்பவர் உமராபாத் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து தன் சிங்கை காவல்துறையினர் கைது செய்தபோது அவர் நெஞ்சு வலிப்பதாக கூறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.