தமிழ்நாடு

ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் பற்றி எரிந்ததால் பரபரப்பு

DIN


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென்று தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை அணைத்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

ஓசூர் ராயக்கோட்டை சாலையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்துவருபவர் பெருமாள் இவருடைய மகன் சுரேந்தர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

இவர் பேரண்டப்பள்ளி அருகே கோவிலுக்குச் சென்றுவிட்டு ஓசூர் நோக்கி வந்துகொண்டிருந்தபோது தேசிய நெடுஞ்சாலையில் காந்திநகர் என்ற பகுதியில் அவர் ஓட்டி வந்த நானோ கார் திடீரென பின் பகுதியில் தீப்பற்றி எரிந்தது உடனடியாக அவர் கீழே இறங்கி உயிர் தப்பினார். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் எரிந்துகொண்டிருந்த வாகனத்தின் தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT