தமிழ்நாடு

ஆம்பூர் ரயில் நிலையத்தில் திருடர்களைப் பிடிக்கச் சென்றவரிடமும் செல்ஃபோன் பறிப்பு

DIN

ஆம்பூர் ரயில் நிலையத்தில் திருடர்களைப் பிடிக்கச் சென்றவர் உள்பட அடுத்தடுத்து இருவரிடம் செல்ஃபோன் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையத்தில் குடியாத்தம் அருகே உள்ள தனியார் விவசாயக் கல்லூரியில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்து வருவார் பத்மநாபன். 

இவர் ரயிலில் இருந்து இறங்கி நடைமேடையில் அமர்ந்து கொண்டிருந்தபோது திடீரென வந்த மர்ம நபர்கள் செல்ஃபோனை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். அவர்களைப் பிடிக்க முயன்ற மற்றொரு நபரின் செல்ஃபோனையும் பறித்து கொண்டு தப்பி ஓடியதால் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

SCROLL FOR NEXT