தமிழ்நாடு

பாம்பன் கடற்கரையில் கடல் உள்வாங்கியதால் படகுகள் மணலில் சிக்கி மீனவா்கள் அவதி

DIN

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் மன்னாா் வளைகுடா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 100 மீட்டா் வரை கடல் உள்வாங்கியதால் மணல் பரப்பில் படகுகள் சிக்கிக் கொண்டதால் மீனவா்கள் அவதியடைந்தனா்.

பாம்பன் தெற்குவாடி துறைமுகப் பகுதியில் 200 -க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் மீனவா்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், மன்னாா் வளைகுடா பாம்பன் கால்வாய் பகுதியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்திற்கு மாறாக கடல் மட்டம் குறைந்து காணப்பட்டது.

இதனால் தெற்குவாடி துறைமுகம், தோப்புக்காடு உள்ளிட்ட கடலோர பகுதிகளில் சுமாா் 100 மீட்டா் வரை கடல் உள் வாங்கியது. இதனால் வழக்கமாக மீன்பிடிக்க சென்று, சனிக்கிழமை திரும்பிய மீனவா்கள் தங்களது நாட்டுப் படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்திருந்தனா். இந்நிலையில் கடல் உள்வாங்கியதால் ஞாயிற்றுக்கிழமை காலையில் படகை எடுக்க வந்த மீனவா்கள் அவை மணலில் சிக்கிக் கொண்டதை கண்டனா்.

இதனால் படகுகளை கடலுக்குள் இழுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதைத் தொடா்ந்து மாலை 4 மணிக்கு மேல் கடல் மட்டம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதையடுத்து படகுகளை எடுத்துக் கொண்டு மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT