திருவாரூரில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்
திருவாரூரில் நகராட்சி சார்பில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டன.
தமிழ்நாடுதிருவாரூரில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்
திருவாரூரில் நகராட்சி சார்பில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டன.
திருவாரூரில் நகராட்சி சார்பில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி திருவாரூர் பழைய பேருந்து நிலையப் பகுதியில், பயணிகள் இருக்குமிடம், பேருந்துகள் ஆகியவற்றின் மீது கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டது. இதுதவிர நகராட்சி அலுவலகம் கடை வீதி உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களிலும் கிருமி நாசினி அடிக்கப்பட்டது.
அத்துடன் பாதுகாப்பு முறைகள் குறித்து நகராட்சி பணியாளர்களுக்கும் செயல் விளக்கங்கள் அளிக்கப்பட்டன மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.