தமிழ்நாடு

திருச்சியில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம்

DIN

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகிய சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் திருச்சியில் சிறை நிரப்பும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தமிழகத்தின் மாவட்ட தலைநகரங்கள் உள்ளிட்ட 36 இடங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக திருச்சி மத்திய சிறை அருகே ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் இந்த சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின் போது கருப்பு பலூன்களை பறக்கவிட்டு தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

SCROLL FOR NEXT