கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் முதல் நபர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
கரோனா வைரஸ் (கொவைட்-19) நோய் தொற்று பாதிப்பு காரணமாக மதுரையை சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்க நபர் ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
உண்மையை மறைத்ததால் நேரிட்ட உயிரிழப்பு.. மதுரை கரோனா பலி, நடந்தது என்ன? பின்னணி விவரம்
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 2 மணியளவில் அவர் உயிரிழந்தார். இந்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது சுட்டுரைப் பக்கத்தில் உறுதிபடுத்தினார்.
மேலும் படிக்க.. மதுரையில் கரோனா நோயாளி பலியானது எப்படி?
வெளிநாடு அல்லது வெளிமாநிலம் சென்று வராமல் கரோனா பாதிப்புக்கு உள்ளானவர் ஆவார். இவருக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் நுரையீரல் தொடர்பான நீண்டகால நோய் பிரச்னைகள் மிகவும் தீவிரமாக இருந்து வந்ததாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.