தமிழ்நாடு

மயிலாடுதுறை தனி மாவட்டம்: ஜி.கே.வாசன் வரவேற்பு

DIN

மயிலாடுதுறை தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பதற்கு தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று அறிவித்திருப்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். தமிழக அரசு நிா்வாக வசதிகளுக்காக பெரிய மாவட்டத்தை இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களாகப் பிரித்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை தனி மாவட்டமாகப் பிரிக்கப்படும் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக அரசு ரூ.3,780 கோடி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT