தமிழ்நாடு

கரோனா: தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் 29 பேர் 

DIN

தமிழகத்தில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் இந்த வைரஸுக்கு 27 பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் 2 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இத்துடன் தமிழகத்தில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது. 

லண்டனில் இருந்து சென்னை வந்த 24 வயது இளைஞர், 65 வயது பெண் ஆகியோருக்கு கரோனா உறுதியானது என்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட இருவரின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதேசமயம் தமிழகத்தில் கரோனாவுக்கு ஒருவர் பலியான நிலையில் 2 பேர் பாதிப்பிலிருந்து குணடைந்துள்ளனர். இதனிடையே கரோனா நோய்த் தடுப்புக்காக போா்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக அரசின் சாா்பில் ரூ.3780 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 இடங்களில் சதமடித்த வெயில்! உஷ்ணத்தின் உச்சத்தால் தவிக்கும் தமிழகம்

அதி வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் மீண்டும் காயம்!

‘கூல்’ கண்ணம்மா!

கலவர பூமியான கலிபோர்னியா பல்கலைக்கழகம்! பாலஸ்தீன - இஸ்ரேல் ஆதரவாளர்களிடையே மோதல்

கரை வந்த பிறகு பிடிக்கும் கடல்!

SCROLL FOR NEXT