தமிழ்நாடு

தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் ஒத்திவைப்பு

தமிழகத்தில் ஏப்ரல் 1ம்  தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட இருந்த  ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

DIN

சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 1ம்  தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட இருந்த  ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

திருவாரூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், தற்போது தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமில்லை என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சோதனை முறையாக ஏற்கனவே தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

அப்பாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை: சண்முக பாண்டியன்

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

SCROLL FOR NEXT