முகப்பு
தமிழ்நாடு

20 துப்புரவு பணியாளர்களுக்கு நவீன கிருமி நாசினி தெளிப்பான் இயந்திரம்

ஈரோடு மாவட்டத்தில் கரோனாவை தடுக்கும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:19 PM
பகிர்:

ஈரோடு மாவட்டத்தில் கரோனாவை தடுக்கும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக ஈரோடு மாநகர் பகுதியில் 4 மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து வருகிறார்கள். நான்கு மண்டலத்துக்கு 5 பணியாளர்கள் வீதம் 20 துப்புரவு பணியாளர்களுக்கு நவீன கிருமிநாசினி தெளிப்பான் இயந்திரம் வழங்க முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், கே எஸ் தென்னரசு ஆகியோர் தங்கள் செலவில் தலா 65,000 வீதம் ரூ. 1லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் 20 நவீன கிருமிநாசினி தெளிப்பான் இயந்திரங்களை வாங்கினர். இந்த இயந்திரங்களை துப்புரவுப் பணியாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். 

எம்எல்ஏக்கள் கேவி ராமலிங்கம் கே.எஸ்.தென்னரசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய இயந்திரங்களை பணியாளர்களுக்கு வழங்கினர்.  இந்த புதிய இயந்திரங்களில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் மோட்டாருடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் 11 லிட்டர் கொள்ளளவு பிடிக்கும். ஒரே இடத்திலிருந்து பணியாளர் 5 மீட்டர் தூரத்திற்கு மருந்துகள் தெளிக்க முடியும்.  

அதேசமயம் தேவைக்கு ஏற்ப கூட்டவும் குறைக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. பணியாளர்கள் இதை எளிதாக எடுத்துச் செல்லும் வகையில முதுகுகளிலும் மாற்றிக் கொள்ளலாம். நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் விஜயகுமார், பகுதி செயலாளர் கேசவமூர்த்தி கோவிந்தராஜ், உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக எம்எல்ஏக்கள் கேவி ராமலிங்கம் ,தென்னரசு ஆகியோர் ஈரோடு பஸ் ஸ்டாண்டில் செயல்பட்டு வரும் பெரிய மார்க்கெட்டை பார்வையிட்டு  ஆய்வு செய்தனர்.

அங்கு வரும் மக்கள் இடைவெளி விட்டு செல்கின்றனரா?எ ன்று பார்வையிட்டனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →