ஊரடங்கு தளர்வு நாளை முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில் சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்துக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்றுடன்(மே 3) ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, நாளை முதல் ஊரடங்கு தளர்வு அமலுக்கு வரவுள்ள நிலையில் சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்துக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சைதாப்பேட்டை சின்னமலை முதல் திருவல்லிக்கேணி வாலாஜா சாலை சிக்னல் - அண்ணா சிலை வரை போக்குவர்த்தஹு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கரோனா தொற்று தீவிரம் காரணமாக கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி அண்ணா சாலையில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.