அருப்புக்கோட்டையில் இளம்பெண்ணுக்குக் கரோனா தொற்று
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைக்கு சென்னையிலிருந்து வந்த இளம் பெண்ணுக்குக் கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தமிழ்நாடுஅருப்புக்கோட்டையில் இளம்பெண்ணுக்குக் கரோனா தொற்று
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைக்கு சென்னையிலிருந்து வந்த இளம் பெண்ணுக்குக் கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைக்கு சென்னையிலிருந்து வந்த இளம் பெண்ணுக்குக் கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அப்பெண் வசிக்கும் வீடு மற்றும் வீதி தனிமைப்படுத்தப்பட்டதுடன், அப்பெண்ணும் மதுரை ராசாசி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப் பட்டார்.
விருதுநகர் மாவட்டத்திற்கு வெளி மாவட்டங்களிலிருந்து வருவோர் குறித்து சுகாதாரத் துறையினர் தீவிரமாகக் கண்காணித்து, அவர்களை அடையாளம் கண்டு உரிய பரிசோதனைகள் மற்றும் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை ராயபுரம் பகுதியில் பணிபுரியும் 33 வயது கணினிப் பொறியாளர் ஒருவர் கடந்த வாரம் தனது மனைவி, குழந்தைகள், தாய் தந்தையர் உள்ளிட்ட மொத்தம் 7 பேருடன் சென்னையிலிருந்து புறப்பட்டுத் தனது சொந்த ஊரான அருப்புக்கோட்டைக்கு இம்மாதம் 1ம் தேதி வந்திருந்தாராம்.
உடனடியாக அவர்கள் குறித்தத் தகவல் பெறப்பட்டு சுகாதாரத் துறையினர் சார்பில் அக்குடும்பத்தினர் 7 பேருக்கும் தொற்றுப் பரிசோதனை செய்தனர். இதில் வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில், பொறியாளரின் 29 வயது மனைவிக்கு மட்டும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனடியாக தொற்று பாதிக்கப்பட்ட அப்பெண் மதுரை ராசாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
மேலும் சொக்கலிங்கபுரம் பகுதியில் அப்பெண் வசிக்கும் வீடு மற்றும் வீதி உள்ள உஜ்ஜி சாமி கோவில் சுற்று வட்டப் பகுதிகள் தனிமைப் படுத்தப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதாரத் துறை, வருவாய்த் துறை மற்றும் காவல் துறையால் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கடந்த புதன் கிழமை நிலவரப்படி நோய்த் தொற்று ஏற்பட்டோர் எண்ணிக்கை மொத்தம் 35 ஆகவும், நோய் குணமடைந்தோர் எண்ணிக்கை 22 ஆகவும், சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 13 ஆகவும் இருந்தது குறிப்பிடத் தக்கது. தற்போது நோய்த் தொற்று ஏற்பட்டோர் எண்ணிக்கை 35 லிருந்து 36 ஆக அதிகரித்துள்ளது.