கரூர் அருகே சாலை விபத்து: 25 பேர் காயம்
கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் சுற்றுலா பேருந்தும், தண்ணீர் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 25 பேர் காயமடைந்தனர்.
கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் சுற்றுலா பேருந்தும், தண்ணீர் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 25 பேர் காயமடைந்தனர்.
கரூர்-சேலம் நெடுஞ்சாலையில் ராம் நகர் அருகே சுற்றுலா பேருந்தும், தண்ணீர் லாரியும் நேற்று மோதியது. இந்த விபத்தில் 25 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். பேருந்தில் பயணம் செய்த அனைவரும் கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. ஊடரங்கு உத்தரவுக்குப் பிறகு கரூர் மாவட்டத்தில் நடந்த முதல் சாலை விபத்து இதுவாகும்.